GIVE & RECEIVE FULL

Custom Search

Sunday, March 23, 2008

அந்தோணி முத்துவின் ஆங்கில வலைப்பூ...


வெகு நாட்களாய் ஆங்கில வலைப்பூ ஒன்று துவங்க வேண்டுமென்ற விருப்பம் இன்று நிறைவேறியிருக்கிறது.

விரும்பினால், நேரமிருப்பின்..., இங்கே கிளிக் செய்து படியுங்கள்....

மிக முக்கிய வேண்டுகோள்.

ஓரிரு வார்த்தைகளேனும் பின்னூட்டமிட்டு ஊக்குவிக்க முயற்சி செய்யுங்கள்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Saturday, March 22, 2008

23) இதைக் கொஞ்சம் பாருங்களேன்..!


சமீமமாக ஒரு இணையதளத்தைக் கண்டேன்.

இந்த தளத்தில், நமது தின வரவு செலவுக் கணக்கை பதிவு செய்து வைக்கலாம்.

மாத முடிவில் , ஒவ்வொரு வகை (டேக்) லிம் செலவு செய்ததை காண்பித்து தருகிறது.

இதன் மூலம் நாம் எதில் அதிகம் அல்லது குறைவாக செலவு செய்துள்ளோம் என்பது தெரியவரும்.

நமது சொந்த மற்றும் வீட்டு செலவு கணக்கை பராமரிக்க சிறந்த எளிய வழி.

இதை நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும்....
எங்கும், எப்போதும் பயன்படுத்தலாம்.

மாணவர்களும், தனி நபர்களும்...இன்னும் யார் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்

நம் செலவை நாமே திட்டமி்ட்டுக் கொள்ளலாம்.

நமது சுய விபரங்கள், கணக்கு வழக்குகள் அதி ரகசியமாக பாதுகாக்கப் படுகிறது.

இந்த தளத்தில் இலவசமாக நமது கண்க்கை உருவாக்கி பயன் பெறலாம்.

பார்க்க www.ispendin.com http://www.ispendin.com

முயற்சி செய்துதான் பாருங்களேன்....!


விரும்பினால் பிறரும் பயன்பெற ஏதுவாக...
உங்களின் வலைப்பூவில் இந்த தளத்தின் Banner போட்டு வையுங்களேன்.


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

23) A new beginning towards a magical journey...


This day is...
my day...!

my first step towards a...
magical journey

I've got a job.

my shoulders strengthened
and
I felt my wings growing with
feathers of faith

I suddenly felt...
up in the sky
and
I could see the world...
with a bird's eye

Oh God...!
Thank you so much...
for those...
beautiful hearts on the earth...!

who had lifted me...
up in the sky...!

Their eyes glisten with...
tears
and...

their lips...

widen with smiles...
seeing me...
up in the sky..!

Thanks a zillion...
my Lord..!

for
creating me like this...

so that...

I could earn...

Inspire..,


these beautiful golden hearts
around me...

which makes me...
still stronger...,
confident...

and

ofcourse happy too!!!



Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Saturday, March 15, 2008

22) விகடனுக்கு ஆனந்த நன்றிகள்...!



இநத வாரம் 19-03-2008 தேதியிட்ட ஆனந்த விகடனில் வந்த கட்டுரையைப் பார்த்துவிட்டு பலபேர் பாராட்டுகிறார்கள்.

Mail அனுப்புகிறார்கள்.

என்னைப் பார்த்து பலர், தங்களின் மனத்தில் தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறார்கள்.

என்னுடைய இந்த நிலைக்காக இப்போது மிக மிக சந்தோஷப் படுகிறேன்.

உதாரணத்திற்கு சிலரின் வார்த்தைகளை இங்கே தந்திருக்கிறேன்.

மனசெல்லாம் திகட்டத்திகட்ட இனிப்பு சாப்பிட்டதைப்போல உணர்கிறேன்.

நான் சிலருக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறேன் என்கிற ஒரு மனநிறைவு போதும்.

என் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும்..., வெளிச் சொல்ல இயலாத மனக்காயங்களுக்கும்...
ஏதோ ஓர் அர்த்தம் கிடைத்திருப்பதை அறிகிறேன்.

இதே போல மனநிறைவு கிடைக்குமெனில்...
இன்னும் எத்தனை பிறவி வேண்டுமானாலும்...
இந்நிலையை ஏற்கச் சித்தமாயிருக்கிறேன்.

என்னுடைய கர்ணனைப் போல நானும் இந்த உலகத்திற்கு என்னிடமிருந்து ஏதோ ஒன்றைக் கொடுக்க முடிந்ததில்...
மிகச் சந்தோஷம்.

என்னுடைய அத்தியாவசியத் தேவைகள் இன்னும் சில நிறைவேறவில்லை.

1) மாதம் ஒரு நிலையான வருமானம்.
2) Laptop.
3) Powered Wheel Chair.

என் தேவைகளுக்காக கடவுளிடம் வேண்டி கீழே ஒரு கடிதமும் எழுதியிருக்கிறேன்.

கடவுள் பதில் கொடுக்க கொஞ்ச தாமதமாகிறதென்பது புரிகிறது.

ஆனால் நிச்சயமாக பதில் வருமென்று உறுதியாய் நம்புகிறேன்.


எனக்கு உதவுவதில் முனைப்பாய் உள்ள அனைத்து வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கும் குறிப்பாக, என்றென்றும் அன்புடன் பாலா அண்ணன் அவர்களுக்கும் என் ஆழ்மன நன்றிகள்.

எனது இல்லத்திற்குச் சென்று, விகடனைப் படிக்க, இங்கே Click செய்யவும்.

விகடனுக்கு எனது ஆனந்த நன்றிகள்.

Here are some of the inspired:

1) பாக்கியராசன் சேதுராமலிங்கம்... said...
வணக்கம் தல,

கொஞ்ச நாளாவே நம்ம வாழ்கைல கொஞ்சம் பிரச்சனை...வேலை இல்லை... அமெரிக்கா வந்து வேலை இல்லாம இருக்குறது நான் மட்டும் தான்னு நெனைக்கிறேன்.. என் ஆங்கில புலமையோ இல்ல, தொழில்நுட்ப புலமையோ சரி இல்லாம வேலை கிடைக்கிறது தள்ளி போய்கிட்டே இருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா என் மேல எனக்கு இருந்த நம்பிக்கை போகிட்டே இருக்குது...

இந்த நேரத்துல தான் உங்க வலைபூ பார்த்தேன்... உங்கள பற்றியும் படிச்சேன், ஏற்கனவே படிச்சிருந்தாலும் திருப்பியும் பாரதி கவிதையும் படிச்சேன்... மனசுல கொஞ்சம் தெம்பு திரும்பி வந்திருக்கு... அடிச்சு வேலை வாங்குறோம்.. சரி தானா தல...

ரெம்ப நன்றி தல...
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...


2) Vijay Athreyan... said
Hi Muthu,
I’ve seen your interview in Anandha vikatan, Just inspired and logged in to your blog. Amazed….. Wonderful.. Keep up your Work.


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Thursday, March 13, 2008

21) அந்தோணி முத்துவின் காதலி...!




சமீபமாய் அவள் நினைவு என்னை அதிகமாய் வாட்டியெடுக்கிறது.

அவளை மறக்க முடியும்,மறந்து விட்டேன் என்றுதான் இதுவரை நம்பியிருந்தேன்.

ஏனென்றால் அவளைக் காதலித்த வரை நான் சுகப்படவில்லை.

என் காதல் தோல்விக்குப் பிறகு...
வாழ்க்கையே இருளாகிப் போனது போல் உணர்ந்தேன்.

எதிர்காலம் எனக்கு Power Off செய்யப்பட்ட Monitor திரை போல, Blank ஆகிப் போனது.

சிங்கம், புலிக்காட்டில், தன்னந்தனியே, அகப்பட்டுக்கொண்ட சிறு குழந்தை போல, தவித்துப் போனேன்.

அவளைக் காதலித்த வரை, திரைப் பட இசையமைப்பாளனாவது என் இலட்சியமாயிருந்தது.

அயராத முயற்சிகளில் தொடர் தோல்விகள்.

என் இயலாமையை ஈடுகட்ட, சோறு போட்ட நிலங்களை விற்று, துணிச்சலாய் செய்த செலவெல்லாம் வீண் என்பதை, என்னாலும் என் உறவுகளாலும் ஜீரணிக்க முடியவில்லை.

பாம்புப் பிடுங்கலான வார்தைகளைத் தாங்க முடியாமல், ஒரு சமயத்தில்...,
என் கோபத்தை யார்மீது காட்டுவதென்று குழப்பத்தில், விரக்தியின் உச்சபட்ச வெறுப்பில்...

ஆம்..! பெற்ற குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொல்லும் ஈவிரக்கமற்றத் தாய்போல,
என் இசைத்துறைக் க்ண்டுபிடிப்புக்களை நானே...,
இந்தக் கைகளினால் உடைத்தெறிந்த கொலைகார பாவியானேன். (உடைத்தெறியப்பட்ட துண்டுகள், இப்போதும் மனக்கண்ணில் இரத்தம் வழியத் துடிப்பதாய் உணர்கிறேன்)

அதே ஆத்திரத்துடன்.... அவளுடன் 10 வருடங்களுக்கு மேலாய் உறவாடத் துணையாயிருந்த, என் Yamaha PSR-195 கீபோர்டைத் தூக்கினேன் உடைதெறிய.

ஏனோ அழுகை அழுகையாய் வந்தது.

மெல்லத் தடவிக் கொடுத்து...
அந்தக் கறுப்பு வெள்ளைக் கட்டைகளின் மீது முகத்தை இப்படியும் அப்படியும் ஈஷியபடி சற்று நேரம் அழுதேன்.

மெதுவாக நகர்த்தி அப்புறம் வைத்தவன்தான்.

அதற்கப்புறம்....
பாடுவது கூட மறந்து போனது.

எப்போதாவது... இன்னும் அவள் மீது ஆசை இருக்கிறதாவென பரிசோதித்துப் பார்க்க வேண்டி, கீபோர்டைத் தொட்டு வாசித்துப் பார்ப்பேன்.

மீண்டும் சிறிது நேரம் அவளுக்குள் முழுமையாய் மூழ்கிப் போய்,
ஆனாலும் அவள் மீது விருப்பமில்லாதவனைப்போல...
என்னையே ஏமாற்றிக் கொள்வேன்.

ஒரு கட்டத்தில் இப்படி ஏமாற்றிக் கொள்வதும் பிடிக்காமல்...
இசை நாட்டமுள்ள ஒரு நண்பனிடம்.....
கீபோர்டைக் கொடுத்தனுப்பி விட்டேன்.

வருடங்கள் உருண்டோடிவிட்டது.

மனக்காயங்களும் ஆறத் துவங்கியுள்ளது.

கம்ப்யூட்டர் கிடைத்து...
அதன் மூலம் சுய சம்பாத்தியத்திற்கான.....
வெளிச்ச்க் கீற்று தோற்றம் காட்டத் துவங்கியுள்ளது.

இணையம் மூலம் என் எழுத்தாளக் கனவும் நனவாகியுள்ளது.

திடீரென்று...
வாழ்க்கை...
Laptop-ன் LCD ஸ்க்ரீனில் தெரியும் வண்ண வண்ண...
இயற்கை காட்சிகளுடன் மிக அழகாகத் தோன்றுகிறது.

அழகிய வாசங்களை... மனம் நுகர ஆரம்பித்துள்ளது.

நினைத்துப் பார்க்க முடியாத பல கனவுகள், இயல்பாய் நனவாகத் துவங்கியுள்ளன.

இறை நம்பிக்கையுடனான, சுய நம்பிக்கையும்..., அதன் முயற்சிகளின் விளைவுகளும்...
முழு வீச்சில், வினை புரியத் துவங்கியுள்ளன.

இப்போது பார்த்து அவள் மீதான என் காதல் மறு ஜென்மமெடுத்தாற்ப்போல் , வெகுவாய் என்னை வதைக்கிறது.

எனக்குப் பிடித்தப் பாடல்களை மீண்டும் கேட்க்த் துவங்கியுள்ளேன்.

அட...! சமயத்தில் பாடக் கூட செய்கிறேன்.

கனவுகளில் கூட அவள் வந்து... என்னை வியர்த்து விறுவிறுத்து எழச்செய்கிறாள்.

மீண்டும் கீபோர்டில் விளையாடி, சுயநலமற்று...
அவளுடன் கலந்து கரைந்து போக மாட்டேனாவென்று.... மனமும் விரல்களும்... ஏங்கியழுகின்றன.

அவளை உண்மையாய்க் காதலிப்பவர்களைத் துன்பத்திலாழ்த்தி, பிறகு மெல்ல அணைத்து ஆறுதலளிப்பதுதான் அவளுக்கு கைவந்த கலையாயிற்றே?

நண்பனிடம் கொடுத்த கீபோர்டை அவனே திருப்பித் தந்தாலும்...,
கொடுத்த பொருளைத் திரும்பப் பெறுவது மகாபாவம் என்பதில் உறுதியாயிருக்கிறேன்.

உண்பதைக் குறைத்துக் கொண்டேனும்... சேமித்து PITCH BENDER வசதியுடன் கூடிய ஒரு புதிய கீபோர்ட் வாங்கத் துடிக்கிறேன்.

அப்படிப் பார்த்தாலும்... அதற்குப் பணம் சேர்க்கப் பல காலமாகும், என்கிற உண்மை உறைத்து விரக்திச் சிரிப்பு மிஞ்சுகிறது.

நிறைய சம்பாதிக்க வேண்டும்.

என் காதலியுடன் இணைய வேண்டும்.

ஆமாம்...?
நாங்கள் எப்போது பிரிந்தோம்....
இப்போது இணைவதற்கு...?

அவள்தான் என் குரல் நாண்களில் கூட கலந்திருக்கிறாளே.
பிறகென்ன?

எப்போதோ படித்த ஒரு பொன்மொழி நினவுக்கு வருகிறது.

உன்னிடம் உள்ள அனைத்துமே தொலைந்து போய் விட்டாலும்...
நாளை என்ற ஒன்று நிச்சயமாய் இருக்கிறது.
அதில்...
எத்தகைய அற்புதங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்...!


Thursday, March 6, 2008

20) காட்டாற்று மனம்..!


>

வளைந்து...
நெளிந்து...
சுழிந்து....

பேரிரைச்சலுடன்...

சகலத்தையும்...
கொள்ளையடித்துப்...
போகும்...

ஆக்ரோஷத்துடன்....

காட்டாற்று மனம்...!

திக்கித் தடுமாறி...

தன் கரை நோக்கிய...
பயணத்தில்....

சில நேரம்....

ஆற்றின் போக்கிலும்...

சில போது...
எதிர் நீச்சலிட்டும்....

முடிவைத்தேடும்...
ஆத்மா..!

சில சமயங்களில்...

சில காரணங்களால்...

துக்கம் மிஞ்சும்...
சில தோல்விகள்...!

ஆயின்...

இது நிரந்தரமில்லை....!

இது மட்டும் அல்ல...!

எதுவுமே...

நிரந்தரமில்லை...!

Saturday, March 1, 2008

19) ஒரு தனிக்குருவியின் பாடல்....



நீ என்னைவிட்டு
வெகுதூரம்...
சென்றுவிட்டாய்...

திரும்ப வர மாட்டாய்...!

வந்தாலும்...
அனுமதிப்பதாய்ச்...
சித்தமில்லை...!

ஜோடிக்குருவியை...
இழந்து...
தனிமையில்
தவிக்கும்...
ஒற்றைகுருவியாய்...

என் சோகக்கூட்டுக்குள்...
இருந்தபடி....
சுற்றுமுற்றும்...
அலைபாய்கிறேன்....

மரணப் பருந்து...
ஜிவ்வென்று...
விரைந்து வந்து...
'லபக்'கென்று
என்னை...
வாரியெடுத்துக்கொண்டு...
போகாதாவென்று....
வழிமேல்...
விழிவைத்துக்...
காத்திருக்கிறேன்...!

வரும்...!
வரும்...!
வரும்...!
நிச்சயமாய்....
வரும்....!

அது ஒன்றும்...
உன்னைப்போல்...
என்னைப்...
பாதியில்...
கைவிட்டுச்செல்லாது...!

அப்படிச்செய்ய...
அது என்ன...
என்...
காதலியா...?

போ... போ...
திரும்ப வராதே...
என் காதலே...!

என் இரவுகள்...
இனி...
ஒருபோதும்...
சூரியனைக்...
காணப்போவதில்லை!

18) வேதனையாயிருக்கிறது....



மனது மிகவும்...
பாரமாய் இருக்கிறது.

நம்பியவர்களின்...
கழுத்தறுப்பு...

நேசித்தவர்களால் முதுகில் குத்துப்படல்.

சுற்றிலும் நடக்கும்...
சின்னத்தனங்கள்.

தவறுகளைப் பெரிதுபடுத்தி...
அதற்குத் தண்டனை கொடுத்து...
சந்தோஷம் காண்பவர்களின்...
குரூரம்...

அன்பு காட்டுவதாய்...
இதுவரையில்...
நடித்தவர்களின்...
நாடகம்....

பசுக்களாய்க்
காட்டிக்கொண்டு...
உள்ளுக்குள் புலிகளாய்த்
திரிபவர்களின்...
குதறியெடுக்கும்...
கொடூரம்.

அய்யோ...
மனமும் உடலும்...
ஒருங்கே...
தீப்பிடித்து எரிவதாய்...
உணர்கிறேன்.

நரகம் என்பது இப்படித்தான் இருக்குமோ...?

எதையும் வெளிக்காட்ட முடியாமல்
தனிமையில்...
வாய்விட்டுக் அழவும்..
வழியின்றித் துடிக்கிறேன்.

போராடச் சக்தியின்றி...
சோர்ந்து...
விழுகிறேன்.

என் இயலாமையின்...
அதிகபட்ச வெளிப்பாடாய்...
துடித்து...
துவண்டுபோய்...
மௌனமாய்க்
கண்ணீர் சிந்துகிறேன்.

இந்த உலகம்...
எனக்கு வேண்டவே...
வேண்டாம்.

கடவுளே...
தயைசெய்து...
என்னை...
எடுத்துக் கொண்டுவிடேன்...!

இந்த உலகில்...
வாழ...
அசிங்கமாயிருக்கிறது...!

அவமானமயிருக்கிறது...!

ஒன்று...
என்னை...
நீ...
கொன்றுவிடு...!

இல்லை...
நான் கொல்கிறேன்!

மனம் சாகடிக்கப்
பட்டபிறகு...
உடலைக் கொல்வது...
மிகச் சாதாரணம்..!

கால்வாசி இயங்கும்
இந்த உடல்...
ஒரு முக்கால்... பிணம்...!

மனம்...
முழுப் பிணம்..!

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.

LinkWithin

Related Posts with Thumbnails