எந்த விவரிப்பும் தேவையின்றி, நீங்களே அனைத்தையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
கீழ்க்கண்ட படக் காட்சியில் தர்ம தேவதை அழும்போது உங்கள் கண்கள் ஈரமாவது நிச்சயம்.
=============================================================================================================================
என் நெஞ்சே...
உன்னை முழுமையாக...
இறையிடம் சரண் தந்துவிட்டு
என்னை...
என் கடமையைச் செய்ய விடு!
பிறந்த அனைவருக்கும் ஒரு நாள்...
மரணம் நிச்சயம்தான்.
அந்த மரணத்தின் வினாடியிலும்...
நான் கர்ணனாக இறக்க...
அவனிடமே வரம் கேள்!
விதிக்கப் பட்டிருக்கும் நேரமோ...
வெகு வெகு குறைவு..!
முடிக்கப்பட வேண்டிய...
பணிகளோ மிக மிக...
அதிகம்..!
என்ன செய்வேன்..?
என் கர்ணா..!
இந்தத் துயர்...
உனக்கா..?
எனக்கா?
எதையும் தெளிவாகக் கற்றுக்கொள். அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.
நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.
-ஸ்ரீ சத்ய சாய்பாபா
Friday, May 30, 2008
Wednesday, May 14, 2008
உங்கள் அனைவரைப் பற்றின என் கவிதை..... இணைய வானொலியில்....
|
என் அன்புக் கர்ணர்களே....
உங்களைப் பற்றி நான் எழுதிய...
"என் இனிய கர்ணா.." கவிதை... இன்று www.worldtamilnews.com "தமிழ்க் குரல்" இணைய வானொலியில் ஒலிபரப்பப் படுகிறது.
என் வாழ்வின் இன்னொரு கர்ணர் மதுரா ட்ராவெல்ஸ் அதிபர், 'திரு. வி. கே.டி. பாலன் ஐயா' அவர்களின் சிம்மக்குரலில்... அதைக் கேட்கும்போது...
மறைந்த என் தந்தையே...
என் எழுத்தை அங்கீகரித்துப் பாராட்டி...
அவரது சொந்தக் குரலில் வாசிப்பதைப் போல உணர்கிறேன்.
(மேற்கொண்டு எழுத கண்ணீர் மறைக்கிறது.)
பொதுவாக என் எழுத்துக்களைக் குறித்த தாழ்வு மனப்பான்மை எனக்கு உண்டு.
அது இன்றைக்கு முழுவதுமாக நீங்கி விட்டது.
என் இனிய கர்ணா... கவிதையைக் கேட்க இங்கே க்ளிக் செய்து wwww.worldtamilnews.com சென்று... அங்கே "KAVITHAI KELUNGAL" சுட்டி(LINK)யை சொடுக்குங்கள்....
கவிதை கேட்டுவிட்டு....
அங்கேயே Feedback பட்டனை...
Click செய்து...
ஒரு வரி..,
ஒரே ஒரு வரி...
(அ) வார்த்தை பதிவு செய்யுங்கள்.
Monday, May 12, 2008
எப்படி...? (இந்தக் காதல்...?)

எப்படி...?
எப்படியோ ஆரம்பித்தது?
தென்றல் புக முடியாத இடத்தில்
புகுந்து கொண்டது போல
புகுந்தது இந்த அன்பு..!
எல்லோரிடமும் ஆரம்பிப்பதில்லை...!
பார்த்துக் கொண்டு பற்றிக் கொள்ளவில்லை...!
முகம் தெரியா இரவில் பேசித் தீர்க்கும்
அத்தனை கணங்களிலும் ஏதோ ஒன்றில்
கவர்ந்து கொண்டது காலம் என்னையும்...
காதல் உன்னையும்.....!
என்னிடம் ஏழு வண்ண குணங்கள்.
உன்னிடம் ஏழு வண்ண குணங்கள்.
எப்படி உதித்தது அந்தப் பல்லாயிரம்
கோடி வண்ண வானவில்...?
இதிலும் உண்டு கசக்கும் நினைவுகள்...!
உன்னிடம் பேசமுடியாத போதும்...,
உன்னைப் பார்க்க முடியாத போதும்...,
அந்தக் கசப்பான மருந்தைக் குடித்து
உன்னை வெறுக்க முயல்வதுண்டு...!
அது கொஞ்சம் எளிதாகத்தான் இருக்கிறது....
அந்தப் பொழுதுகளைக் கடத்துவதற்கு.....!
Wednesday, May 7, 2008
எனது முதல் சம்பளம்.

ஏப்ரல் 30 அன்று எனது முதல் சம்பளம் ரூ. 3000-த்திற்கான செக் வந்தது.
அதற்கு 2 நாள் முன்னதாகவே பார்ப்பவர்களிடமெல்லாம்.... போன் செய்பவர்களிடமெல்லாம்.... எனக்கு சம்பளம் வரப் போகிறது என்று பினாத்த ஆரம்பித்து விட்டேன்.
செக் பார்த்தவுடன் கண்களில் அருவி வழியத் தொடங்கி விட்டது.
அட...!
நான் கூட வேலை செய்கிறேன்....!
நான் கூட சம்பளம் வாங்கி விட்டேன்....!
இந்த நினைப்பே...
கோடி யானைகளின் பலத்தைத் தந்தது.
சென்ற வருடம் இதே நாளில் அப்பாவிடம்....
"அப்பா... நான் அடுத்த மாசத்துலருந்து சம்பளம் வாங்க ஆரம்பிசிடுவம்ப்பா. அதுக்கப்புறம் உங்களுக்கு மாசா மாசம் 1000 ரூவா கண்டிப்பா தருவேன்...!"
என்று உறுதியளித்தது நினைவுக்கு வந்தது.
2007 ஜூன் 27 அன்று அப்பா எங்களை விட்டுப் போகும் நாள் வரையிலும், எல்லாரிடமும்...
"அடுத்த மாசத்திலருந்து என் சின்ன மவன் சம்பளம் வாங்குவான்... எனக்கு மாசத்துக்கு ஆயிர ரூவா குடுக்கறன்னு சொல்லியிருக்கறான்" என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதை எழுதும் இந்த வினாடியிலும் கண்ணீர் மறைக்கிறது.
அவருடைய அடுத்த மாத நம்பிக்கை.... ஒரு வருடம் கழித்துத்தான் நிறைவேறியிருக்கிறது.
இந்த நிமிடம் வரையிலும் நான் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும் என் தந்தையின் உழைப்பு.
அண்ணனுக்கப்புறம் 6 பெண்களுக்குப் பிறகு... 8-வதாய் என்னைத் தவமிருந்து பெற்று சீராட்டி வளர்த்தவர்.
என் இசைத்திறன், அறிவுத்திறன்.... அனைத்துமே அவரது மரபணு தந்த வரம்.
(வீரமாமுனிவரின் 'தேம்பாவணியை' அவர் சுயமாக மெட்டுக்கட்டி வைத்திருந்தார்.)
அவரது கம்பீரக் குரலில் எந்தப் பாடலுமே கேட்கக் கேட்க இனிமை.
அவர் தன் மக்களுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் ஒரு இலக்கியம் போன்றது.
அவரிடமிருந்து நான் பெற்றவை எண்ணிலடங்கா....
நான் பெற்றதில் கொஞ்சமேனும் திருப்பித் தர ஆயிரம் கனவு கண்டிருந்தேன்.
என் மனக் காடெங்கும்...
முட்டி...
மோதி...
அலைந்துத்...
திரிந்துக்....
கதறுகிறேன்.
அப்பா....! உங்க சின்ன மவன் சம்பளம் வாங்கியுட்டம்ப்பா.
உங்களுக்குச் சேர வேண்டிய 1000 ரூவாய யார்ட்டப்பா குடுப்பன்.?
ஏம்பா என்ன விட்டுட்டுப் போனீங்க?
கண்ணீரினூடே நேரெதிர் ஷெல்ஃபில் புகைப்படத்திற்குள்ளிருந்து அப்பாவின் உருவம் ஏதோ பதில் சொல்வதாய்ப் படுகிறது.
(இப்படி ஒரு பதிவை நான் எழுதுமளவுக்கு என்னை உயர்த்திய, "மதுரா ட்ராவெல்ஸின்" அதிபர் என் வணக்கத்திற்குரிய, கலைமாமணி திரு. வி. கே. டி. பாலன் ஐயா அவர்களுக்கு என் கண்ணீர் கலந்த நன்றிகள்.)

Subscribe to:
Posts (Atom)
A Letter to God
Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,"
1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,"
1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)