
வாழ்வின் ஜீவாதாரமாக நான் எண்ணியிருந்த ஒரு ஜீவனின் இழப்பு காரணமாக...
என் சமீப இடுகைகளில்...
சற்று அதிகப்படியான சோகம் வழிந்திருக்கலாம்.
எத்தனை இழப்பாயினும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்... எனும் தெளிவு பெறச் சற்று நேரம் பிடிக்கத்தான் செய்தது.
என்னதான் பாசிட்டிவ் அந்தோணிமுத்து என மார்தட்டிக் கொண்டாலும்,
மானுட பிறவிகளுக்கே உரித்தான பலகீனத்தைத் தவிர்க்க முடியவில்லை...
அன்பான நட்புக்களின் இடைவிடாத ஆறுதலினாலும், அறிவுறுத்தல்களினாலும்...
இப்போது முழுமையாக மீண்டு வந்து விட்டேன்.
இதற்கு முழுமையாக உதவியவர்கள்...
என் வாழ்வின் வழிகாட்டி என நான் அழைக்கும், ஜெய்ப்பூர் வாழ் தலைமை ஆசிரியை அருணா அவர்கள்.
அவர்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள்.
இழப்பு குறித்தான சுய இரக்கம் தேவையற்றது.
போனவை போகட்டும்.
மீதமிருக்கும் என் புதையல்களை, பொக்கிஷங்களை...
எண்ணத் துவங்கியிருக்கிறேன்.
இவற்றை எனக்குக் கொடுத்த எல்லாம் வல்ல இறைக்கு நன்றி.

