
மழையில் நனனைந்தபடி...
வெடித்துக் கிளம்பும்...
என் ஓங்காரச் சிரிப்பில்...
எல்லோருக்கும்... என் சந்தோஷமும்...
சுயநம்பிக்கையும்... தெரிகிறதாம்.
ரகசியமாய் அழும்... என் கண்ணீரையும்...
கூடவே... உன் நினைவுகளையும்... வெளித்தெரியாமல்..
கரைத்துக் கொண்டு போகாதா... பாழும் மழை...?
எனும் என் ஏக்கம்... எவருக்குத் தெரியும்...!
மழையும்... முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது!