தாய்ப் பறவை பறந்தது..!
இனி அது திரும்பி வரப்போவதில்லை..!
குஞ்சு அழுதது.
அம்மா...
பறக்க முடியாத என்னையும்...
உன்னோடு எடுத்துப் போயிருக்கக் கூடாதா?
நீயில்லாத இந்தக் கூண்டில்..
உனக்கிணையாய் என் மீது அன்பு காட்ட எவருண்டு..?
நீயும் கைவிட்டாய்.
நம்பியவர் கைவிட்டார்.
என்ன செய்வதென்று புரியவில்லை..?
எங்கு செல்வதென்று புரியவில்லை..?