GIVE & RECEIVE FULL

Custom Search

Wednesday, June 23, 2010

ஏலி... ஏலி... லெமா சபக்தானி! (என் கடவுளே! என் கடவுளே..! ஏன் என்னைக் கைவிட்டீர்?)



நீ ஏன் வந்தாய்?

ஏன் போனாய்?

எதுவுமே புரியவில்லை..!

உன் நிராகரிப்பினால் உண்டான கசப்பு...
மனம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

என்றோ..
சிலுவையில் தொங்கி
உயிர் விட்ட ஆன்மாவின்...
வேதனைக் குரல்...
இன்னமும் காதுகளில் எதிரொலிக்கிறது.

ஏலி... ஏலி... லெமா சபக்தானி!

Button Comment

Tuesday, June 8, 2010

பெயரற்ற ஒன்றுக்காக...!

id

வெறுமையான மரத்தடி பெஞ்ச்...

உதிர்ந்து கொண்டிருக்கும் பூக்கள்...

கரையும் வாழ்நாட்கள்...

கிசு கிசுத்துக்கொண்டு...

முன்னேறி வரும்...

(கப் சிப் கபர்தார்... மூச்!)

அந்த...

ஏதோ ஒன்றுக்காய்...

காத்திருக்கின்றன!


Button Comment

Monday, June 7, 2010

சொந்த ஊரு போனாரு..!

id


கடந்த 3 மாதமாகவே மனதுக்குள் தாங்க முடியாத தவிப்பு.

சொந்த ஊருக்குப் போகணும். எல்லாரையும் ஒருதரம் பார்த்துடணும்.

கடைசியாய் அம்மா இறப்புக்கு சென்றது.

மனதின் விருப்பம் நிறைவேறியது.

நட்புக்கள் எவரிடமும் ஒரு வார்த்தை சொல்லவில்லை.

11 வயது வரை ஓடியாடி புரண்ட மண்.

24 வயது வரை வளர்ந்த மண்.

பல வருடங்கள் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்து...
அழுதிருந்த அதே...
கூரை வீட்டுத் திண்ணையில் மீண்டும் 1 வாரகால வாசம்.

உணர்வற்று செயலிழந்த என் கால்களை கடித்து உண்ட எறும்புகள், பழைய எறும்புகளின் சொந்தமோ?

1996-லிருந்தான சென்னை வாழ்க்கையினூடே எப்போதேனும் போய்வர சந்தர்ப்பம் கிடைத்துப் போன போதெல்லாம் இடது திண்ணையில் அப்பாவும், வலது திண்ணையில் அம்மாவும் படுத்திருப்பார்கள்.

"ராஜா... சின்னதொரே! சாப்பிட்டியா?"

அந்த அன்புக் குரல்கள் கேட்கவில்லை.

வெறும் திண்ணைகள் முகத்திலறைந்தன.

சிரமப்பட்டு....

தேற்றிக்கொண்டு...

பச்சை பசும் வயல் வெளிகளைக் கொஞ்சிவிட்டு.

சில முக்கிய நட்ப்புக்களை மட்டும் பார்த்து அளவளாவி விட்டு...

புறப்பட்டுவீட்டேன்.

வழக்கமாக புறப்படுகையில் அப்பா எழுந்து வந்து நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து ஆசீர்வதித்து அனுப்பி வைப்பார்.

இந்த முறை அண்ணன் ஆசீருடன்.

அப்பா எப்படி செய்வாரோ அதே போல... அண்ணனும்!

கண்கள் குளமாக...

வாடகைக் கார் நகர்கிறது.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி...

போய் வருகிறேன் என் மண்ணே..!

உயிரோடிருந்தால் மீண்டும் சந்திக்கிறேன்.

நிலையாமைதானே நிலையானது.

கீழ் வயிற்றில்... 4 மாதமாக உள்ளுக்குள் வலித்துக் கொண்டிருக்கும் கட்டி... இப்போது உயிர் போகுமளவு வலிக்கிறது.


Button Comment

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.

LinkWithin

Related Posts with Thumbnails