
எப்படி...?
எப்படியோ ஆரம்பித்தது?
தென்றல் புக முடியாத இடத்தில்
புகுந்து கொண்டது போல
புகுந்தது இந்த அன்பு..!
எல்லோரிடமும் ஆரம்பிப்பதில்லை...!
பார்த்துக் கொண்டு பற்றிக் கொள்ளவில்லை...!
முகம் தெரியா இரவில் பேசித் தீர்க்கும்
அத்தனை கணங்களிலும் ஏதோ ஒன்றில்
கவர்ந்து கொண்டது காலம் என்னையும்...
காதல் உன்னையும்.....!
என்னிடம் ஏழு வண்ண குணங்கள்.
உன்னிடம் ஏழு வண்ண குணங்கள்.
எப்படி உதித்தது அந்தப் பல்லாயிரம்
கோடி வண்ண வானவில்...?
இதிலும் உண்டு கசக்கும் நினைவுகள்...!
உன்னிடம் பேசமுடியாத போதும்...,
உன்னைப் பார்க்க முடியாத போதும்...,
அந்தக் கசப்பான மருந்தைக் குடித்து
உன்னை வெறுக்க முயல்வதுண்டு...!
அது கொஞ்சம் எளிதாகத்தான் இருக்கிறது....
அந்தப் பொழுதுகளைக் கடத்துவதற்கு.....!
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
1 comment:
//என்னிடம் ஏழு வண்ண குணங்கள்.
உன்னிடம் ஏழு வண்ண குணங்கள்.
எப்படி உதித்தது அந்தப் பல்லாயிரம்
கோடி வண்ண வானவில்...?//
அட!!! இது ரொம்ப நல்லாருக்கே!!!
அன்புடன் அருணா
Post a Comment