
காற்றாடப் பறந்திருந்த...
காதல் பட்டாம்பூச்சிகளில்...
பெண் சொன்னது..!
ஏய்..!
ஒரு விளையாட்டு.
நாளைக் காலை,
யார் இந்தத் தாமரையின் மேல்
முதலில் வந்து உட்காருகிறோமோ...
அவர்களுக்குத்தான் அதிகக் காதல். சரியா?
சரி'யென்றது ஆண்பூச்சி.
மறுநாள் காலை...
4- மணிக்கே வந்துவிட்ட...
பெண் பட்டாம்பூச்சி...
வெகு நேரமாய்க் காத்திருந்தது.
விடியப் போகிறது.
இன்னும் அவனைக் காணவில்லையே.
இதுதான்,
அவன் என்மேல் கொண்ட
காதலின் லட்சணமோ..?
புலம்பியபடிக் காத்திருந்தது
பெண்பூச்சி.
விடிந்தது.
சூரிய ஒளிபட்டு
தாமரையின்..
இதழ் விரிந்தது.
இதழ்களின் நடுவே...,
தன் காதலுக்காக..
முன் தினம் மாலையே...
வந்தமர்ந்து...
தாமரை...
மூடிக்கொண்டதைக் கூட உணராமல்...
மூச்சு முட்டி...
செத்துப் போயிருந்தது...
அந்த ஆண் பட்டாம்பூச்சி.
பி. கு: சமீபத்தில் எனக்கு வந்தக் குறுஞ்செய்தியைக்(SMS) கதையாக்கியிருக்கிறேன்.
:-))) நீதி:- காதலிகளிடம் பந்தயம் வைக்காதீர்கள். செத்துப் போவீர்கள். :-)
:-)
:-)
:-)))))
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
2 comments:
நல்ல கதை....but bad moral of the story..பூச்சியாயிருந்தால் கூட பெண் பூச்சிக்குத் தான் என் support..
அன்புடன் அருணா
இனிய கதை, அழகான படைப்பு. வாழ்த்துகள்
அன்புடன் என் சுரேஷ்
Post a Comment