
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
அன்று
என் பொழுதுகள் வெறுமெனே
சுவற்றைப் பார்த்துக்
கழிந்துகொண்டிருந்தன....
இன்று
என் பொழுதுகள்
என் வேலைகளுக்கு 24 மணி
நேரம் போதவில்லையே என
கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அன்று
என்னுடன் பேச கடவுள்
மட்டுமே தயாராயிருந்தார்.....
இன்று
என்னுடன் எப்போதும் பேச
சில அன்பு உள்ளங்கள்
தயாராகயிருக்கின்றன.....
அன்று என் தொலைபேசி
மணி அழைக்காதா என
ஏங்கிக் கொண்டிருந்தேன்....
இன்று
என் தொலைபேசி மணியொலித்துக்
கொண்டேயிருக்கிறது...
அன்புள்ளங்களின்
அன்புத் தொல்லைகள்
அன்று
என் தேவைகளுக்கும்
காசுக்காக அடுத்தவர்கள்
முகப் பார்த்திருந்தேன்...
இன்று
என் தேவைகளைக்
கவனித்துக் கொள்ளும்
அளவுக்குச் சம்பாதிக்கிறேன்
அன்று
வெளிக் காற்றைச் சுவாசிக்க
மாட்டேனா என்று தவம்
கிடந்திருக்கிறேன்.
இன்று
என் இரும்புக் குதிரையில்
சுதந்திரக் காற்றைச்
சுவாசித்துக் கொண்டே
ஊர்வலம் வருகிறேன்.....
சென்ற வருடம் இன்று (03-12-2008)
நான் ஆரம்பித்த வலைப்பூவும்
என்னை இந்த நிலைக்கு உயர்த்திய சில
காரணங்களுள் முக்கியமான ஒன்று.
கோடானு கோடி நன்றி!!!!
1 comment:
wow....ஒரு வருடம் ஆகிவிட்டதா???
வாழ்த்துக்கள் அந்தோணி!!!மென்மேலும் எழுதி உயர்வடைய வாழ்த்துக்கள்!
அன்புடன் அருணா
Post a Comment