
நேற்றுத் தெருவோரம்...
குப்பைகளோடு...
காலிழந்து...
தலையில்லாமல்...
கேட்பாரற்று கிடந்தது...
ஏதேனும் ஒரு குழந்தை அதை...
கொஞ்சிக் கொஞ்சி விளையாடி...
"என்னுது..!
யாரும் தொடக்கூடாதூ..!"
எனக் குளிப்பாட்டி...
பவுடர் பூசி...
பொட்டு வைத்து...
அழகு பார்த்து...
இன்று வளர்ந்து விட்டதால்...
பள்ளி செல்லத் தொடங்கியதால்...
நண்பர்கள் கிடைத்து விட்டதால்...
அல்லது...
பொம்மை பழமையானாதால்...
அப்பா அம்மா திட்டியதால்...
அங்கஹீனம் பிடிக்காததால்...
தூக்கி எறிந்து விட்டிருக்கலாம்.
சட்டென்று நினைவு வர...
இல்லாத என் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு...
மௌனமாய்...
நகர ஆரம்பித்தேன்..!
5 comments:
தள்ளி வைத்தல் என்பது ரண வேதனை தரக் கூடியதுதான் இல்லையா அண்ணா? சொல்ல முடியாத சோகம் வழிந்தோடுகிறது.
கல்யாணி சுரேஷ் said...
//தள்ளி வைத்தல் என்பது ரண வேதனை தரக் கூடியதுதான் இல்லையா அண்ணா? சொல்ல முடியாத சோகம் வழிந்தோடுகிறது. //
ஆம்.
யாரும் யாரையும் தள்ளி வைக்க முடியது அந்தோணி...தள்ளி வைப்பவர்களைத் தள்ளி வைத்து விடுங்கள்....முதலில் இந்த சோகத்தைத் தள்ளி வையுங்கள்.
அன்புடன் அருணா said...
//யாரும் யாரையும் தள்ளி வைக்க முடியது அந்தோணி...தள்ளி வைப்பவர்களைத் தள்ளி வைத்து விடுங்கள்....முதலில் இந்த சோகத்தைத் தள்ளி வையுங்கள்.//
:-)
சில உடைந்த பொம்மைகளைப்பார்க்கும்போது
தோன்றும் எண்ணங்களைக் கோர்த்திருக்கிறீர்கள்.
அந்தோணி...நீங்க கட்டாயம் பாஸிட்டிவ்தான்!
Post a Comment