
வாழ்வின் ஜீவாதாரமாக நான் எண்ணியிருந்த ஒரு ஜீவனின் இழப்பு காரணமாக...
என் சமீப இடுகைகளில்...
சற்று அதிகப்படியான சோகம் வழிந்திருக்கலாம்.
எத்தனை இழப்பாயினும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்... எனும் தெளிவு பெறச் சற்று நேரம் பிடிக்கத்தான் செய்தது.
என்னதான் பாசிட்டிவ் அந்தோணிமுத்து என மார்தட்டிக் கொண்டாலும்,
மானுட பிறவிகளுக்கே உரித்தான பலகீனத்தைத் தவிர்க்க முடியவில்லை...
அன்பான நட்புக்களின் இடைவிடாத ஆறுதலினாலும், அறிவுறுத்தல்களினாலும்...
இப்போது முழுமையாக மீண்டு வந்து விட்டேன்.
இதற்கு முழுமையாக உதவியவர்கள்...
என் வாழ்வின் வழிகாட்டி என நான் அழைக்கும், ஜெய்ப்பூர் வாழ் தலைமை ஆசிரியை அருணா அவர்கள்.
அவர்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள்.
இழப்பு குறித்தான சுய இரக்கம் தேவையற்றது.
போனவை போகட்டும்.
மீதமிருக்கும் என் புதையல்களை, பொக்கிஷங்களை...
எண்ணத் துவங்கியிருக்கிறேன்.
இவற்றை எனக்குக் கொடுத்த எல்லாம் வல்ல இறைக்கு நன்றி.
6 comments:
May God be with you all the time.......
MY PRAYERS
இதை இதைதான் உங்ககிட்ட எதிர் பார்த்தேன். Thank god.
நீங்கள் என் வலையத்தில் இட்ட கருத்தின் வழியாக உங்கள் வலையத்தை வந்தடைந்தேன். உங்களைப் பார்த்து நான் கற்க நிறைய இருக்கிறது நண்பரே.
//போனவை போகட்டும்.
மீதமிருக்கும் என் புதையல்களை, பொக்கிஷங்களை...
எண்ணத் துவங்கியிருக்கிறேன்.//
அருமை. அருமை.
அருமைஅந்தோனி!அருமையையும் அந்தோணியையும் பிரிக்கலை கவனிச்சிங்களா?..அவ்வளவு அருமை எங்களுக்கு நீங்கள்!நிறைய சொல்லி தரனும் மக்கா நீங்க எங்களுக்கு.ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.நேரம் வாய்க்கிற போது தளம் வாங்களேன்..
காலம்தான் எல்லாவற்றிற்கும் மருந்து!
உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை!
வாருங்கள் வெளியே! வசந்தம் காத்திருக்கிறது!
:)
Post a Comment