பிற்பகல் சுமார் 3 மணியிருக்கும்....
11 வயதுச் சிறுவனாய்... விளையாடியபடி....
அந்தக் கிணற்றருகே சென்று....
தூர் வார நிறுவியிருந்த கட்டுமானங்களில் ஏறி விளையாடியதில்...
"சொய்ங்" என்று வினாடிப் பொழுதுக்குள் 65 அடி ஆழ நீரில்லாக் கிணற்றில்...
"தொம்ம்"
சிறிது சிறிதாக பாதம் தொடங்கி, மரத்துப் போக ஆரம்பித்த உடல், கொஞ்ச நேரத்தில் நிரந்தரமாய் மார்புக்குக் கீழ் மரத்துப் போனது.
ஆயிற்று...
27 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
இதில் நான் சிரித்த நாட்களை விட அழுத நாட்களே அதிகம்.
எப்போதேனும் வந்து மின்னிவிட்டுப் போகிற சந்தோஷ நிகழ்வுகளை அசை போட்டபடி நகர்கிறது வாழ்க்கை.

3 comments:
அழும் நாட்களை விட சிரிக்கும் நாட்கள் அதிகமாகப் பிராத்தனைகள்.
I thank god for saving Anthony's life 27 years ago.
Be happy and praise the Lord brother.
நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொண்டு பலருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் பயணம் இனிமையாக தொடர்வதற்க்கு எல்லாம் வல்ல கடவுள் அருள் புரிய உங்களுக்காக பிராத்திக்கிறேன்.
Post a Comment