
நீ என்னைவிட்டு
வெகுதூரம்...
சென்றுவிட்டாய்...
திரும்ப வர மாட்டாய்...!
வந்தாலும்...
அனுமதிப்பதாய்ச்...
சித்தமில்லை...!
ஜோடிக்குருவியை...
இழந்து...
தனிமையில்
தவிக்கும்...
ஒற்றைகுருவியாய்...
என் சோகக்கூட்டுக்குள்...
இருந்தபடி....
சுற்றுமுற்றும்...
அலைபாய்கிறேன்....
மரணப் பருந்து...
ஜிவ்வென்று...
விரைந்து வந்து...
'லபக்'கென்று
என்னை...
வாரியெடுத்துக்கொண்டு...
போகாதாவென்று....
வழிமேல்...
விழிவைத்துக்...
காத்திருக்கிறேன்...!
வரும்...!
வரும்...!
வரும்...!
நிச்சயமாய்....
வரும்....!
அது ஒன்றும்...
உன்னைப்போல்...
என்னைப்...
பாதியில்...
கைவிட்டுச்செல்லாது...!
அப்படிச்செய்ய...
அது என்ன...
என்...
காதலியா...?
போ... போ...
திரும்ப வராதே...
என் காதலே...!
என் இரவுகள்...
இனி...
ஒருபோதும்...
சூரியனைக்...
காணப்போவதில்லை!
No comments:
Post a Comment